ஆப்நகரம்

மின்னணு பரிவர்த்தனை அதிகரிப்பு: அருந்ததி பட்டாச்சாரியா

கடந்த சில நாட்களாக மின்னணு பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

TNN 24 Nov 2016, 11:47 am
கோவை: கடந்த சில நாட்களாக மின்னணு பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil electronic transactions increases in these days sbi chief arundhati bhattacharya
மின்னணு பரிவர்த்தனை அதிகரிப்பு: அருந்ததி பட்டாச்சாரியா


கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 8-ம் தேதியன்று திடீரென அறிவித்தது. இதனையடுத்து, சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாத சூழல், வங்கிகளில் நீண்ட வரிசை, அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வங்கிகளில் மாற்றம் செய்யக் கூடிய அல்லது எடுக்கக் கூடிய பணத்தின் அளவு குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம், தங்களது டெபிட்/கிரெடிட் கார்டுகளை கொண்டு பரிவர்த்தனை செய்யலாம் என்பதால், அது குறித்த விவரம் அறிந்தவர்கள் தங்களது கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்னணு பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சில்லறை தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மெதுவாக சீரடைந்து வருகிறது. ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வது தொடர்பான பிரச்னை டிசம்பர் மாதத்தில் சீரடையும். மின்னணு பணப் பரிவர்த்தனை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கார்டுகளை கொண்டு பரிவர்த்தனை செய்யும் பாயின்ட் ஆஃப் சேல் எனும் சுவைப் இயந்திரங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என்றார்.

மேலும், ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூ.500 நோட்டுகளை வழங்கும் வகையில் அந்த இயந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பட்டாச்சாரியா, சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-களில் இன்று முதல் ரூ.500 நோட்டுகள் கிடைக்கும் என்றார்.
Electronic transactions increases in these days: SBI chief Arundhati Bhattacharya

அடுத்த செய்தி

டிரெண்டிங்