ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்.. இனி எல்லாருக்கும் கிடைக்காது!!

ரேஷன் கார்டு விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 12 Apr 2022, 9:09 am
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன.
Samayam Tamil ration card


ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இச்சலுகைகளைப் பெறமுடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் நிறையப் பேர் இச்சலுகைகளைப் பெறுவதில்லை. அதேபோல, மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் குற்றச்சாடுகளும் அதிகமாக உள்ளன.

தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்டுள்ளது.

விதவை பெண்களுக்கு பென்சன்.. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!
இதையடுத்து ரேஷன் கார்டு விதிமுறைகள் மாற்றப்படவிருக்கின்றன. தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த விதிமுறைகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வந்தபிறகு நிறையப் பேர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். அரசு தரப்பு புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடிப் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.

ரேஷன் கார்டு இருக்கா? உங்களுக்கு முக்கியமான அப்டேட்!
பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு கரீப் கல்யாண் யோஜனா திட்டத்துக்கான கால வரம்பை மத்திய அரசு சமீபத்தில் நீட்டித்தது. இதையடுத்து தகுதியற்றவர்களுக்கு பலன்கள் செல்லாமல் இருக்க இந்த அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ரேஷன் அட்டை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, தகுதியுடைய மக்களுக்கு தங்கு தடையில்லாமல் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்