ஆப்நகரம்

நானும் மதுரக்காரன்தாண்டா.. எலான் மஸ்க் செய்த காரியம்.. ஆடிப்போன ட்விட்டர்!

ட்விட்டரில் தான் ஒரு நேரடி முதலீட்டாளர் என மீண்டும் ஆவணங்களை தாக்கல் செய்த எலான் மஸ்க்.

Samayam Tamil 7 Apr 2022, 11:35 am
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரில் முதலீடு செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் வெளியானது.
Samayam Tamil elon musk


இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ட்விட்டர் நிறுவனத்தின் பங்கு விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதுமட்டுமல்லாமல் பலரும் எலான் மஸ்கிற்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் வாழ்த்த்து தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக, எலான் மஸ்க் சேர்ந்தபின் ட்விட்டர் புதிய உயரங்களை தொடும் என நம்புவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் டார்சி தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் 9.1% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதையடுத்து ட்விட்டர் நிர்வாகக் குழுவிலும் எலான் மஸ்க் இணைக்கப்பட்டுள்ளார்.

நகை வியாபாரம் சரிவு.. தமிழக அரசு முதலீடு செய்த நிறுவனத்தின் வருவாய் குறைவு!
இந்நிலையில், அமெரிக்க செக்யூரிட்டிஸ் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் எலான் மஸ்க் 13D படிவத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் ட்விட்டரில் 9.1% பங்குகளை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியை கைப்பற்ற எலான் மஸ்க் முயற்சிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நிர்வாகக் குழுவில் மட்டும் மஸ்க் இணைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜனவரி 31 முதல் ஏப்ரல் 1 வரை ட்விட்டர் பங்குகளை வாங்கி வந்ததாக எலான் மஸ்க் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளார். ஒரு பங்கின் விலை 32.80 டாலர் முதல் 40.30 டாலர் என்ற அளவில் எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.

ஏப்ரல் 5ஆம் தேதி பங்கு வர்த்தகம் முடிவில் ட்விட்டர் பங்கு விலை கணிசமாக உயர்ந்து 50.98 டாலர் என்ற அளவில் உயர்ந்துள்ளது. முதலில் தான் ஒரு மறைமுக முதலீட்டாளர் என ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார் எலான் மஸ்க். பின்னர் தான் ஒரு நேரடி முதலீட்டாளர் என மீண்டும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். ட்விட்டர் நிர்வாகத்தில் தனக்கு அதிகாரமும், செல்வாக்கும் உள்ளது என்பதை காட்டுவதற்காகவே எலான் மஸ்க் மீண்டும் ஆவணங்களை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்