ஆப்நகரம்

பயப்பட்றியா குமாரு.. ட்விட்டர் டீலுக்கு ஓகே சொன்ன எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான டீலுக்கு எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்.

Samayam Tamil 5 Oct 2022, 10:50 am
பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை விலைக்கு வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் முயற்சித்து வந்தார். இதற்காக முதலில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2% பங்குகளை எலான் மஸ்க் வாங்கினார்.
Samayam Tamil elon musk twitter


பின்னர் முழு ட்விட்டர் நிறுவனத்தையும் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு மொத்தம் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் முயற்சித்தார். இதற்கான ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருந்தபோது, ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்தார் எலான் மஸ்க்.

இதையடுத்து, எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் வழக்கையும் தொடர்ந்தது. இந்நிலையில், 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தொடர எலான் மஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாணயத்துக்கு ரூ.50 லட்சம் பரிசு.. இதுல அப்படி என்ன இருக்கு!
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுளது. ஏற்கெனவே இவ்விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ட்விட்டர் ஒப்பந்தத்துக்கு எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்திற்கு சென்றால் தீர்ப்பு ட்விட்டர் நிர்வாகத்துக்கு சாதகமாக வரும் என்பதாலேயே ஒப்பந்தத்துக்கு எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து நேற்று பங்கு வர்த்தகத்தில் ட்விட்டர் பங்கு விலை 22.24% உயர்ந்து 52 டாலரை தொட்டுள்ளது. மறுபக்கம், எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பங்கு விலை சுமார் 3% சரிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்