ஆப்நகரம்

ட்விட்டரை வாங்கவில்லை.. டீலில் கைவைத்த எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் டீல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 May 2022, 3:52 pm
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முயற்சித்து வந்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Elon Musk


முன்னணி சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை வாங்குவதற்காக எலான் மஸ்க் முதலில் ட்விட்டரில் 9.2% பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் மாறினார். இதனால் அவருக்கு ட்விட்டர் தலைமை பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

பின்னர் அவருக்கு தலைமை பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து, மொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்குவதற்கு எலான் மஸ்க் முயற்சித்தார். இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் எலான் மஸ்க் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஆபீசுக்கு வர முடியாது.. அந்த வேலையே வேணாம்! ஆப்பிளுக்கு வந்த சோதனை!!
முதலில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க்கிடம் விற்பனை செய்ய ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்ததாக தகவல் வெளியானது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளோ, நிர்வாக கைமாற்றமோ நடக்காமலேயே இருந்தது.

இந்நிலையில், ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ட்விட்டரில் போலி கணக்குகள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்