ஆப்நகரம்

EMI கட்டணம் உயர்வு.. கடன் வாங்கியோருக்கு புது தலைவலி!

வட்டி உயர்வால் EMI கட்டணங்கள் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 17 Mar 2022, 6:54 pm
பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. இதன்படி வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக இப்போதுதான் வட்டியை உயர்த்தியுள்ளது ஃபெடரல் ரிசர்வ்.
Samayam Tamil EMI


வழக்கமாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படும். இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இப்போது வரை வட்டி விகிதம் உயர்த்தப்படாமலேயே உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் வட்டி உயர்வு நடவடிக்கையின் எதிரொலியாக இந்தியரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஆரின் சரவெடி பதில்.. தமிழகத்தின் சிறந்த முதலீடு இதுதான்!
வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். இதனால் கடன்களுக்கான EMI தொகை அதிகரிக்கும்.

ஏற்கெனவே பணவீக்கத்தால் விலைவாசி ஏற்றம் அடைந்து பொதுமக்கள் கடும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், வட்டி உயர்வால் EMI கட்டணத் தொகை அதிகரித்து பொதுமக்களுக்கு EMI சுமை மேற்கொண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்