ஆப்நகரம்

இனி 9000 ரூபாய் பென்சன்? அரசு முக்கிய முடிவு!

ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்சன் தொகை 9000 ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Jan 2022, 11:38 am
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது ஊழியர்களுக்கு மிகப் பெரிய சலுகையை வழங்கும் திட்டத்தில் உள்ளது. இதன்படி, அடுத்து வரும் நாட்களில் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இது தொடர்பான முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
Samayam Tamil pension


ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) ஒரு பகுதியாக அமைப்புசாரா துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்த்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இந்த பென்சன் உயர்வு குறித்து ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை மேற்கொள்ளவிருக்கிறது.

சென்ற 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில் தற்போது குறைந்தபட்ச பென்சன் தொகை 9,000 ரூபாயாக உயர்த்தப்படுவது இபிஎஸ் திட்டத்தின் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக பலன்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்சனர்களுக்கு சூப்பர் வசதி.. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்!
பிப்ரவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில், புதிய ஊதிய விதியை அமல்படுத்துவது மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது ஆகிய இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் கடைசி மாத சம்பளத்தின் அடிப்படையில் பென்சன் தொகையை இறுதி செய்ய வேண்டும் என்ற ஆலோசனை உள்ளது.

இதுமட்டுமல்லாமல், தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய ஊதிய விதியை அமல்படுத்துவது போன்ற முக்கிய பிரச்சினைகள் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் ஈபிஎஃப்ஓ வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்