ஆப்நகரம்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு புது பிரச்சினை.. அமலாக்கத்துறை தீவிர விசாரணை!

பண மோசடி தடுப்பு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை.

Samayam Tamil 25 May 2022, 12:28 pm
பங்குச் சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகியான சித்ரா ராமகிருஷ்ணா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். சித்ராவும், தேசிய பங்குச் சந்தையின் மற்றொரு அதிகாரியுமான ஆனந்த் சுப்ரமணியனும் இப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil chitra ramkrishna


இவ்வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இருவரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. சித்ராவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க அனுமதி மறுத்ததை தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே நேற்று சித்ரா ராமகிருஷ்ணாவிடம் திஹார் சிறையில் நீண்ட நேரத்துக்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

உங்களோட அட்வைஸ் தேவையில்லை.. எகிறி அடித்த பிடிஆர்
சிபிஐ பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையிலேயே அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையை நடத்தியுள்ளது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் வாக்குமூலத்தை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

வரும் நாட்களில் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். சித்ரா வழக்கில் சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்