ஆப்நகரம்

கோவையில் சுயதொழில் மாநாடு! முன்னாள் படை வீரர்கள் ஆர்வம்!

முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் ஊக்குவித்தல் தொழில் முனைவோர் கருத்தரங்கு கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

Samayam Tamil 7 Jun 2022, 4:11 pm
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சுயதொழில் ஊக்குவித்தல் தொடர்பான கருத்தரங்கு வருகிற ஜூன் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil business


இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக சுயதொழில் நடத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் முனைவோர் கருத்தரங்கு வருகிற 14ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வங்கி மேலாளர்கள் அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சுயதொழில் மற்றும் கடன் உதவித் திட்டங்கள் பற்றி விளக்குவார்கள். மேலும், சுயவேலைவாய்ப்பு மூலம் தொழில் செய்ய விருப்பம் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமயம் தமிழ் செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!

முன்னதாக சென்ற வாரத்தில், முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் ரூ.2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 6 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்காக ரூ.1.85 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. ராணுவ பயிற்சி தொகுப்பு மானியத் தொகையாக ஒரு நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 9 நபர்களுக்கு, 2.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்