ஆப்நகரம்

PF பணம்... ஒரு மாதத்தில் 15 லட்சம் பேர் இணைப்பு!

ஜூலை மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் பிஎஃப் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Sep 2021, 3:53 pm
இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பலருக்ககு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் பிஎஃப் பணத்தை அதிகமாக எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல, பிஎஃப் பணம் முழுவதையும் எடுத்து கணக்கை முடித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. பிஎஃப் திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 10.21 லட்சத்திலிருந்து மார்ச் மாதத்தில் 5.72 லட்சமாகக் குறைந்தது. அடுத்து வந்த மாதங்களிலும் இதே நிலை நீடித்தது.
Samayam Tamil pf


இந்நிலையில், 2021 ஜூலை மாதத்தில் பிஎஃப் திட்டத்தில் 14.65 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்தில் 6.6 லட்சம் பேரும், ஜூன் மாதத்தில் 11.2 லட்சம் பேரும் புதிதாக பிஎஃப் திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இணைந்தவர்களில் 9 லட்சம் பேர் மட்டுமே புதிதாக இணைந்தவர்கள். எஞ்சிய 9.4 லட்சம் பேர் ஏற்கெனவே இத்திட்டத்திலிருந்து வெளியேறியவர்கள் ஆவர்.

PF சந்தாதார்களுக்கு எச்சரிக்கை! கொஞ்சம் மிஸ் ஆனா பணம் அபேஸ்!
ஜூலை மாதத்தில் பிஎஃப் திட்டத்திலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சமாக இருந்துள்ளது. 2020-21 நிதியாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் புதிதாக இணைந்த சந்தாதார்களின் எண்ணிக்கை சராசரி ஜூலை மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை முந்தைய இரண்டு ஆண்டு சராசரியை விடக் குறைவுதான். 2018-19ஆம் ஆண்டின் மாதாந்திர சராசரி 5 லட்சம் முதல் 6.5 லட்சம் வரையில் இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்