தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக ஒவ்வொரு மாதத்துக்கான உறுப்பினர் சேர்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2022 ஜனவரி மாதத்துக்கான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்ற ஜனவரி மாதத்தில் 15.29 லட்சம் பேர் பிஎஃப் அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 2021 டிசம்பர் மாதத்தை விட 2022 ஜனவரி மாதத்தில் 2.69 லட்சம் பேர் அதிகமாக இணைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் இணைந்த 15.29 லட்சம் உறுப்பினர்களில் சுமார் 8.64 லட்சம் பேர் புதிதாக இணைந்தவர்கள். பிஎஃப் அமைப்பில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து அதிலிருந்து வெளியேறி, மீண்டும் உறுப்பினர்களாக இணைந்தவர்களின் எண்ணிக்கை 6.65 லட்சம். 2021 ஜூலை மாதம் முதலே பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜனவரி மாதத்திலும் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனா பிரச்சினை வந்தபிறகு மருத்துவச் செலவுகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு நிறையப் பேர் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக் கொண்டு தங்களது கணக்கை மூடினர். மருத்துவச் செலவுக்கு மட்டுமல்லாமல் மற்ற தேவைகளுக்கும் பணத்தை அதிகமாக எடுத்துப் பயன்படுத்தினர். பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்தால் அதன் வட்டி லாபம் பாதிக்கப்படும்.
ஆனால், கடந்த சில மாதங்களில் பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
ஜனவரி மாதத்தில் இணைந்த 15.29 லட்சம் உறுப்பினர்களில் சுமார் 8.64 லட்சம் பேர் புதிதாக இணைந்தவர்கள். பிஎஃப் அமைப்பில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து அதிலிருந்து வெளியேறி, மீண்டும் உறுப்பினர்களாக இணைந்தவர்களின் எண்ணிக்கை 6.65 லட்சம். 2021 ஜூலை மாதம் முதலே பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜனவரி மாதத்திலும் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனா பிரச்சினை வந்தபிறகு மருத்துவச் செலவுகளுக்காக பிஎஃப் பணத்தை எடுத்துப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு நிறையப் பேர் தங்களது பிஎஃப் பணத்தை எடுத்துக் கொண்டு தங்களது கணக்கை மூடினர். மருத்துவச் செலவுக்கு மட்டுமல்லாமல் மற்ற தேவைகளுக்கும் பணத்தை அதிகமாக எடுத்துப் பயன்படுத்தினர். பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்தால் அதன் வட்டி லாபம் பாதிக்கப்படும்.
ஆனால், கடந்த சில மாதங்களில் பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.