ஆப்நகரம்

PF பணம்.. கொத்து கொத்தாக இணையும் தொழிலாளர்கள்!

ஏப்ரல் மாதத்தில் 17 லட்சம் பேருக்கு மேல் பிஎஃப் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

Samayam Tamil 21 Jun 2022, 1:02 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திட்டம் என்பது ஊழியர்களுக்கு பெரிய அளவில் பயன் தரும் திட்டமாகும். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளத்தில் சிறு தொகையை சேமித்து வைத்தால் அதே தொகையை நிறுவனமும் வழங்கும் என்பதோடு வட்டி வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் அதிக லாபம் கிடைக்கிறது. இந்த பிஎஃப் திட்டத்தில் நிறைய பலன்கள் உள்ளன. எதிர்காலத்தில் இது கைகொடுக்கும் என்பதோடு, திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகள் மற்றும் திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு பிஎஃப் பணம் உதவும்.
Samayam Tamil epfo


பிஎஃப் திட்டத்தில் உள்ள பயன்கள் மற்றும் சிறப்பு அம்சங்களால் ஒவ்வொரு மாதமும் நிறையப் பேர் பிஎஃப் திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அதேபோல, பிஎஃப் திட்டத்தில் இருந்து வெளியேறியவர்களும் மீண்டும் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சென்ற ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 17.08 லட்சம் பேர் பிஎஃப் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் இனி அந்த பிரச்சினையே இல்லை.. பயணிகளுக்கு சூப்பரான வசதி!

ஏப்ரல் மாதத்தில் இணைந்த மொத்த உறுப்பினர்களில் சுமார் 9.23 லட்சம் பேர் EPF & MP சட்டம் 1952-இன் கீழ் புதிதாக இணைந்தவர்கள். மேலும், 7.85 லட்சம் பேர் ஏற்கெனவே பிஎஃப் திட்டத்தில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்கள் ஆவர். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது பிஎஃப் கணக்கு தொடங்கிவிட்டு சில காரணங்களால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது பிஎஃப் திட்டத்திலிருந்து வெளியேறிவிடுகின்றனர். பின்னர் மீண்டும் வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும்போது அங்கு பிஎஃப் திட்டத்தில் மீண்டும் இணைகின்றனர். சிலர் ஏற்கெனவே இருக்கும் பிஎஃப் கணக்கையே அங்கே தொடருகின்றனர்.

பிஎஃப் திட்டத்தில் இணைந்தவர்களைப் பொறுத்தவரையில், 22 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் தான் அதிகமான அளவில் (4.30 லட்சம்) ஏப்ரல் மாதத்தில் இணைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து 29 முதல் 35 வயதினரின் எண்ணிக்கை 3.74 லட்சமாக உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்