ஆப்நகரம்

PF பயனாளிகளுக்கு எச்சரிக்கை.. உங்கள் பணத்துக்கு பெரிய ஆபத்து!

PF சந்தாதாரர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கையை விடுத்த EPFO.

Samayam Tamil 7 Feb 2022, 10:47 am
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது சந்தாதாரர்கள் சொந்த விவரங்கள், தனிநபர் தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. சொந்த தகவல்களை பகிர்ந்துகொண்டால் உங்களின் பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் EPFO எச்சரித்துள்ளது.
Samayam Tamil EPFO


இதுகுறித்து EPFO தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தாதாரர்களின் ஆதார் எண், UAN நம்பர், OTP, வங்கிக் கணக்கு எண் போன்ற சொந்த விவரங்களை EPFO எப்போதும் போன் அழைப்பு மூலமாகவோ, சமூக வலைதளங்கள் வாயிலாகவோ கேட்பதில்லை” என்று தெரிவித்துள்ளது.

சில மோசடி கும்பல்கள் EPFO பெயரில் சந்தாதாரர்களின் சொந்த விவரங்களை கேட்டுப் பெற்று அதன் மூலம் பணத்தைக் கொள்ளையடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்காக அந்த மோசடி கும்பல்கள் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகின்றனர்.

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு தாவும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்!
இதேபோல, கொஞ்சம் பணம் டெபாசிட் செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனவும் போலியாக பேசி பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். இந்நிலையில், ஏராளமான புகார்கள் வந்துள்ளதை தொடர்ந்து, சந்தாதாரர்கள் யாரும் சொந்த தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என EPFO அறிவிறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்