ஆப்நகரம்

புதிய பென்சன் திட்டம் வந்தாச்சு.. தனியார் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தனியார் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவதற்கான திட்டத்தை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 May 2022, 1:08 pm

பணி ஓய்வு பெறும் தனியார் ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது குறித்து EPFO (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) பரிசீலித்து வருகிறது. இதற்காக ‘விஷ்வாஸ்’ என்ற திட்டத்தை சோதனை முறையில் லூதியானாவில் மட்டும் தொடங்கியுள்ளது EPFO.
Samayam Tamil pension


இத்திட்டத்தின் கீழ் லூதியானா பகுதிக்கு மட்டும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, பணி ஓய்வுபெறும் தனியார் ஊழியர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஆவண வேலைகளை முடிக்க வேண்டும். இதன்பின் ஊழியர்கள் பணி ஓய்வுபெறும்போது பென்சன் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வகையில் ஏப்ரல் மாதம் பணிஓய்வு பெறும் 91 ஊழியர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி பென்சன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 84 பேர் பென்சன் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏழு பேர் தாமதமாக பென்சன் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சீனியர் சிட்டிசன்களுக்கு ஜாக்பாட்.. இனி அதிக வருமானம் கிடைக்கும்!

இதன்படி, ஊழியர்களுக்கு பணி ஓய்வுபெறும் மாதத்தில் PF பணம் செலுத்தப்பட வேண்டும். பின்னர் PF அலுவலகத்துக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பென்சன் பெறுவதற்கு கோரிக்கை வைக்கலாம். மாதத்தின் 15ஆம் தேதிக்கு முன்பாக பணி ஓய்வுபெறுவோர் ECR (Electronic Challan cum Return) சமர்ப்பிக்க வேண்டும்.

EPFO நிறுவனம் முதல்முறையாக இந்த திட்டத்தை பரிசோதனை முறையில் தொடங்கியுள்ளது. திட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை கண்டறிவதற்காக லூதியானாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் மற்ற இடங்களிலும் தொடங்கப்படும் என EPFO கூடுதல் மத்திய ஆணையர் குமார் ரோஹித் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்