ஆப்நகரம்

PF பணம்: 14 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு!

பிஎஃப் திட்டத்தில் புதிதாக 13.95 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

Samayam Tamil 21 Jan 2022, 8:30 pm
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்ததால் அதைல் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க பிஎஃப் பணத்தை அதிகமாக எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல, ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் சந்தாதார்கள் பலர் பிஎஃப் அமைப்பிலிருந்து வெளியேறினர்.
Samayam Tamil pf


ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பிஎஃப் திட்டத்தில் புதிதாக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 2021ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே பிஎஃப் திட்டத்தில் புதிதாக இணையும் சந்தாதார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, 2021 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 13.95 லட்சம் பேர் பிஎஃப் அமைப்பில் தங்களைப் புதிதாக இணைத்துக் கொண்டுள்ளனர்.

PF பணம்.. இரண்டு முறை எடுக்கலாம்... எப்படி அப்ளை செய்வது?
இந்த எண்ணிக்கையானது 2020ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட எண்ணிக்கையை விட 38 சதவீதம் அதிகமாகும். இந்த விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இணைக்கப்பட்ட பிஎஃப் சந்தாதார்களின் எண்ணிக்கையை விட நவம்பர் மாத எண்ணிக்கை25.65 சதவீதம் அதிகமாகும். அதாவது 2.85 லட்சம் பேர் அதிகமாக இணைந்திருக்கின்றனர்.

2021 நவம்பர் மாதத்தில் இணைக்கப்பட்ட சந்தாதார்களில் சுமார் 8.28 லட்சம் பேர் முதன்முறையாக இணைந்தவர்கள். எஞ்சிய சந்தாதார்கள் ஏற்கெனவே வெளியேறி மீண்டும் இணைந்தவர்களாவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்