ஆப்நகரம்

44 லட்சம் பேருக்கு பிஎஃப் பணம்... நீங்க எடுத்தீங்களா?

கோவிட் முன்பணமாக 44 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.11,500 கோடி பிஎஃப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Oct 2020, 3:47 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது. அதன்படி, பிஎஃப் பணத்தை அதிகளவில் எடுத்து வருகின்றனர்.
Samayam Tamil pf money


அதன்படி, அக்டோபர் 15ஆம் தேதி வரையில் 44 லட்சம் கோவிட் முன்பண விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, ரூ.11,500 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்தோஷ் குமார் கங்வார், கோவிட் முன்பணம் தொடர்பான மனுக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்துக்குள் முடித்து வைத்து சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளைப் பாராட்டினார்.

5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் ஒரு கோடி சம்பாதிக்கலாம்!

மேலும் அவர் பேசுகையில், “கடந்த 175 நாட்களாக தொழிலாளர்களின் கோவிட் முன்பணம் தொடர்பான மனுக்கள் 24 மணி நேரத்துக்குள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தைத் தாண்டியும் பிஎஃப் அலுவலக ஊழியர்கள் பணியாற்றி 3.25 லட்சம் சந்தாதாரர்களுக்கு ரூ.750 கோடி பணம் விநியோகித்துள்ளனர். வழக்கமாக பிஎஃப் விண்ணப்பங்களை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் இந்த அலுவலகம் 90 சதவீத விண்ணப்பங்களை 24 மணி நேரத்துக்குள் முடித்து வைத்துள்ளது. அதேபோல, நாடு முழுவதும் பிஎஃப் அலுவலகங்கள் வெளிப்படைத் தன்மையுடன், திறம்படச் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்