ஆப்நகரம்

பிஎஃப் சந்தாதார்களுக்கு ரூ.14,000 கோடி!

டிசம்பர் மாத இறுதி வரையில் மொத்தம் 56.79 லட்சம் பேருக்கு ரூ.14,310 கோடி பிஎஃப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Jan 2021, 9:27 pm
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது.
Samayam Tamil pf money


மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது. இதன்படி, பிஎஃப் பணத்தை அதிகப் பேர் எடுத்து வருகின்றனர். 2020 டிசம்பர் 31 வரையில் கோவிட் -19 தொடர்பான 56.79 லட்சம் முன்கூட்டிய உரிமைக் கோரல்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமைக் கோரல்களின் கீழ் ரூ.14,310 கோடியை ஈபிஎஃப் அமைப்பு வழங்கியுள்ளது.

SBI செக் புக் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி?

இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட மொத்த பிஎஃப் தொகையில் சுமார் 20 சதவீதம் கோவிட் -19 பிரிவின் கீழ் எடுக்கப்பட்டதாகும். கொரோனா தொற்றுநோயால் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறை தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிகப் பேர் கோவிட் -19 முன்தொகையை எடுத்துப் பயன்படுத்தியுள்ளதாகவும் ஈபிஎஃப் அமைப்பு கூறியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், தானியங்கி முறையிலான செட்டில்மெண்ட் மூலமாக பிஎஃப் தொகைக்கான விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தங்களது உறுப்பினர்கள் கொரோனா சமயத்தில் பண நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்கவும், இப்பிரச்சினையைக் கையாளவும் கொரோனா சிறப்புத் தொகுப்பு பிஎஃப் பணத்தை விரைந்து வழங்கி வருவதாகவும் ஈபிஎஃப் அமைப்பு கூறியிருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்