ஆப்நகரம்

நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி.. காரணம் இதுதான்!

சிவகிரி விற்பனைக் கூடத்தில் 35 லட்சத்து 68 ஆயிரத்துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 11 Aug 2022, 11:45 am
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 1636 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 30 காசுக்கும், சராசரி விலையாக 68 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.
Samayam Tamil erode


மொத்தம் 52,734 கிலோ எடையுள்ள நிலக்கடலை 35 லட்சத்து 68 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனையானது. சென்ற வாரத்தைப் போல இந்த முறையும் அதிக விலைக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Erode: சிவகிரியில் நிலக்கடலை ஏலம்.. ரூ.23 லட்சத்துக்கு விற்பனை!
இதேபோல கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1129 நிலக்கடலை மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. அதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 30 காசுக்கும், அதிகபட்ச விலையாக 70 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 64 ரூபாய் 80 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 36,619 கிலோ எடையுள்ள நிலக்கடலை 23 லட்சத்து 30 ஆயிரத்து 872 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்