ஆப்நகரம்

ஈரோடு: என்ன இப்படி ஆகிருச்சு.. கடுப்பில் ஜவுளி வியாபாரிகள்!

நூல் விலை உயர்வு மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்ததால் ஈரோடு ஜவுளி மார்க்கெட்டில் வியாபாரம் மந்தமாக உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.

Samayam Tamil 16 Aug 2022, 4:33 pm
ஈரோடு ஜவுளி சந்தையில் நூல் விலை உயர்வு மற்றும் வெளி மாநில வியாபாரிகள் வரத்து குறைந்ததால் மொத்த வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. அதேசமயம் சில்லறை விவகாரம் சூடு பிடித்துள்ளது.
Samayam Tamil erode textile market


ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெறுவது வழக்கமாகும். இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்கள் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கமாக உள்ளது.

நூல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களுக்காக ஜவுளி சந்தையில் சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடந்தது. இந்நிலையில் ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி மீண்டும் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் களைகட்ட தொடங்கியது. கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வந்ததால் வேட்டி, துண்டு, காவி சட்டை போன்றவற்றின் விற்பனை அதிகரித்தது.

சுதந்திர தினம்.. ரூ.500 கோடிக்கு தேசிய கொடி விற்பனை!
இந்நிலையில் இன்று வழக்கம் போல் சந்தை கூடியது. கர்நாடகாவிலும் பலத்த மழை மற்றும் நூல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடந்தது. கேரளாவில் இருந்து ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். கேரளாவில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை வர உள்ளதால் இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

அதே நேரம் உள்ளூர் மற்றும் அண்டை மாவட்ட வியாபாரிகள் ஓரளவு வந்திருந்ததால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். நடப்பு வாரம் மட்டும் சில்லரை வியாபாரம் 35 சதவீதம், மொத்த வியாபாரம் 20 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்