ஆப்நகரம்

ஈரோடு ஜவுளி சந்தையில் சூடுபிடிக்கும் விற்பனை!

கனமழையால் கர்நாடக வியாபாரிகள் வராத நிலையில் சில்லறை விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Samayam Tamil 9 Aug 2022, 8:15 pm
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
Samayam Tamil textile market


நூல் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் ஜவுளி சந்தையில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடந்தது. இந்நிலையில் ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி மீண்டும் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வந்ததால் வேட்டி, துண்டு, காவி சட்டை போன்றவற்றின் விற்பனை அதிகரித்தது.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் சந்தை கூடியது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல கர்நாடகாவிலும் பலத்த மழை பெய்து வருவதால் ஆந்திரா கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. கேரளாவிலிருந்து ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர்.

ஜவுளி வியாபாரிகள் வேதனை.. காரணம் இதுதான்!
கேரளாவில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை வர உள்ளதால் இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால் அதே நேரம் உள்ளூரிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்றைய சந்தையில் மட்டும் சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்