ஆப்நகரம்

நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அம்பலமாகும் வங்கி மோசடி!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மீது மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Samayam Tamil 18 Feb 2018, 9:53 am
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மீது மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Samayam Tamil every 4 hours 1 bank staffer held for fraud
நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அம்பலமாகும் வங்கி மோசடி!


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11,400 கோடி முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1, 2015 முதல் மார்ச் 1, 2017 வரையான கால கட்டத்தில் 5200 பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒரு வங்கி ஊழியர் மீது மோசடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



இதில் 1538 பேர் ஸ்டேட் வங்கியைச் சேர்த்த ஊழியர்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் 184 பேர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்