ஆப்நகரம்

காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய தமிழக நகை வர்த்தகர்களுக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான நகை வர்த்தக நிறுவனங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

TNN 5 Apr 2016, 10:23 pm
தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான நகை வர்த்தக நிறுவனங்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளும்படி கோரிக்கை எழுந்துள்ளது.
Samayam Tamil excise duty issue federation calls for indefinite closure of jewellery outlets in tamil nadu
காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய தமிழக நகை வர்த்தகர்களுக்கு வேண்டுகோள்


சென்னை பெங்காலி நகை வர்த்தகர்கள் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பின் தலைமையில் சென்னையில் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துவிதமான நகை வர்த்தகர்களும், ஒன்று சேர்ந்து, காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், அந்த அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நடைபெற்று வரும் நகை வர்த்தகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, வட இந்திய மாநிலங்களில் சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. இதேபோல, தமிழகத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், நகை உற்பத்தி மீது விதிக்கப்பட்டுள்ள கலால் வரி விதிப்பை மத்திய அரசு திரும்பப் பெறும் என்றும், சென்னை பெங்காலி நகை வர்த்தகர்கள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்