ஆப்நகரம்

வட்டி விகிதம் மீண்டும் உயருமா? ரிசர்வ் வங்கி எடுக்கும் முக்கிய முடிவு!

வரும் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படுமா?

Samayam Tamil 3 Jun 2022, 4:36 pm
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்து வந்தது. பணவீக்கத்தின் நெருக்கடியை சமாளிப்பதற்காக நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது. மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
Samayam Tamil RBI


இந்நிலையில், ஜூன் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் நடைபெறவுள்ளது. கொள்கை கூட்ட முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியாகும். ஜூன் மாதமும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், வரும் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவே நிபுணர்கள் கூறுகின்றனர். வட்டியை உயர்த்த முடிவு செய்தாலும் லேசாக மட்டுமே வட்டி உயர்த்தப்படும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உணவகங்களில் சேவைக் கட்டணம் சட்டவிரோதம்.. மத்திய அரசு புதிய திட்டம்!
வட்டியை உயர்த்தப்படாமல் இருக்க காரணம் என்ன? பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததற்கு பெட்ரோல், டீசல் விலை முக்கிய காரணமாக இருந்தது. எனவே, பணவீக்கத்தை தணிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு, கோதுமை ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதனால் பணவீக்கம் குறையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்புகள் குறைவு என்கின்றனர் நிபுணர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்