ஆப்நகரம்

கடல் உணவு ஏற்றுமதி.. இந்தியாவின் புதிய இலக்கு!

இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 7 Jun 2022, 9:34 am
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதுபோல, வெளிநாட்டு இறக்குமதியைக் குறைத்து செலவுகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடல் உணவு ஏற்றுமதியில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil sea foods


இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி தற்போது ரூ.50,000 கோடி மதிப்பில் உள்ளது. இதை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கி, ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொச்சியில் நேற்று கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமயம் தமிழ் செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!

மேலும் பேசிய அவர், ”மீன் பிடித்தலை அதிகரித்தல், தரம் மற்றும் வகைகளை உறுதி செய்தல் மற்றும் மீன் வளர்ச்சித் துறைக்கு தேவையான ஆதரவை வழங்குதல் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியாவுடன் தடையில்லா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடாவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்று வருகிறது. ஜரோப்பிய யூனியனுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்கள் வரும் 17ஆம் தேதி தொடங்கும்” என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்