ஆப்நகரம்

இனி வருமான வரி அதிகாரிகளைக் கண்டு மிரள வேண்டாம்!

“மைசூரில் இருக்கும் நபரிடம் கவுகாத்தியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரி மதிப்பீட்டு செய்யலாம்.” என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Samayam Tamil 23 Aug 2019, 11:50 am

ஹைலைட்ஸ்:

  • அதிகாரிகளைச் சந்திக்காமல் வரி மதிப்பீடு முடிந்துவிடும்.
  • புதிய முறை அக்டோபர் 8 முதல் அமலுக்கு வரும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tax ass
வரும் அக்டோபர் 8ஆம் தேதி விஜயதசமி பண்டிகையன்று மறைமுக வரி மதிப்பீடு முறை அமலுக்கு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரி மதிப்பீட்டுக்காக வருமான வரித்துறை அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து பதிலளிக்க வேண்டிய அவசியத்தைப் போக்கும் வகையில் மறைமுக வரி மதிப்பீடு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இது வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு பதில் யோனோ: பயன்படுத்துவது எப்படி?

இது குறித்து பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜயதசமி முதல் மறைமுக வரி மதிப்பீடு நடைமுறைக்கு வரும் என்றார். “மைசூரில் இருக்கும் நபரிடம் கவுகாத்தியில் உள்ள வருமான வரித்துறை அதிகாரி மதிப்பீட்டு செய்யலாம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தகவல்களைப் பெற்று அதிகாரிகள் மறைமுக வரி மதிப்பீட்டைச் செய்வார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய ரூபாய் மதிப்பு மிகக் குறைந்த அளவுக்கு வீழ்ச்சி

வரி செலுத்துவோர் வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவாகவோ தவறான தகவல்களை அளித்திருந்தால் அவர்களிடம் வருமான வரித்துறை கடுமையாக நடந்துகொள்கிறது என்ற குற்றச்சாட்டைப் போக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது.

ஏற்கெனவே, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணைகளின்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதைத் தவிர்பார்கள் எனத் தகவல் வெளியானது நினைவூட்டதக்கது.

ஹெச்எஸ்பிசி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்