ஆப்நகரம்

விவசாயிகளுக்கு முக்கிய தகவல்.. கடைசி தேதி நீட்டிப்பு!

விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் பெறுவதற்கு eKYC முடிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 May 2022, 7:12 pm
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
Samayam Tamil pm kisan


பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு காலாண்டுக்கு 2000 ரூபாய் என்ற விகிதம் ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. நிலம் உடைய எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் இந்த பணம் கிடைக்கும்.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற வேண்டுமெனில் eKYC (ஆதார் சரிபார்ப்பு) கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி, இதற்கு முன் மார்ச் 22ஆம் தேதி eKYC முடிப்பதற்கான கடைசி தேதி என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

உங்களுக்கு ரூ.25,000 சம்பளமா? அப்போ இதை பாருங்க!
இதையடுத்து மே 22ஆம் தேதி கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் பலன்களை பெற eKYC முடிப்பதற்கான கடைசி தேதி வரும் மே 31ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கிசான் இணையதளத்தில் தகவ்ல வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?

* ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.

* அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.

* புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆஹ்டார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.

* இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.

* OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.

* இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்