ஆப்நகரம்

PM Kisan 13th installment date: பிஎம் கிசான் பணம் 2000 ரூபாய் வரப்போகுது.. தேதி இதுதான்!

பிஎம் கிசான் சம்மான் நிதி 13ஆம் தவணை தொகை எப்போது வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 22 Feb 2023, 5:15 pm
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக 2019ஆம் ஆண்டில் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
Samayam Tamil 2000 rupees
2000 rupees


ஆண்டுக்கு ஏப்ரல் - ஜூலை, ஆகஸ்ட் - நவம்பர், டிசம்பர் - மார்ச் என மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற வீதம் ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 12 தவணைகள் பிஎம் கிசான் பணம் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் - மார்ச் காலத்துக்கான 13ஆம் தவணை பிஎம் கிசான் தொகை 2000 ரூபாய்க்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்பாக 13ஆம் தவணை பிஎம் கிசான் பணம் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று பிஎம் கிசான் 13ஆம் தவணை தொகை விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே பிஎம் கிசான் பணம் நேரடியாக அனுப்பப்படும்.

விவசாய நிலம் உடைய அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் பணம் வழங்கப்படும். எனினும், குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் பிஎம் கிசான் பணம் வழங்கப்படாது.

பிஎம் கிசான் பணம் பெற தகுதியற்ற விவசாயிகள்:

நிலம் கொண்ட நிறுவனங்கள், விவசாய குடும்பங்களை சேர்ந்த அரசமைப்பு பதவிகளில் இருப்பவர்கள், பணிக்காலத்தில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாதம் 10000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் வாங்கும் ஓய்வூதியதாரர்கள், கடைசி மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்கள் ஆகியோருக்கு பிஎம் கிசான் பணம் 2000 ரூபாய் செலுத்தப்படாது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்