ஆப்நகரம்

உச்சம் தொட்ட பருத்தி விலை.. விவசாயிகள் மகிழ்ச்சி!!

அதிக விலைக்கு பருத்தி ஏலம் போயுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 18 May 2022, 2:56 pm
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் நாமக்கல், பவுத்திரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இந்த ஏலத்தில் 2400 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
Samayam Tamil cotton


வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், ஆர்.சி.எச் ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,399 முதல் ரூ.13,950 வரையில் விலைபோனது. அதேபோல, டி.சி.எச் ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,569 முதல் ரூ.12,949 வரையில் விற்பனையானது.

கொட்டு பருத்தி குவிண்டால் ரூ. 6,098 முதல் ரூ.8,400 வரையில் சென்றது. மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்புக்கு 2400 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த பருத்தி மூட்டைகளை சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, கொங்கணாபுரம், திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

கடந்த வாரங்களை விட இந்த வாரம் பருத்தியின் விலை குவிண்டாலுக்கு 1,500 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் பின்னலாடைத் துறையினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பஞ்சு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சைப் பிளக்கும் பஞ்சு விலை.. புலம்பும் ஜவுளி துறையினர்!

விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களில் பருத்தி மிக முக்கியமான பயிராகும். பருத்தியில் இருந்து பிரித்தெடுக்கும் பஞ்சானது ஜவுளி உற்பத்தியில் முக்கிய பங்காக உள்ளது. பஞ்சாலைகள் மூலம் தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத்தகைய சூழலில் ஜவுளி தொழில் மற்றும் அதன் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் பஞ்சு விலை ஏற்றத்தால் தற்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது

அடுத்த செய்தி

டிரெண்டிங்