ஆப்நகரம்

பூ வியாபாரிகளுக்கு பெரும் ஏமாற்றம்... காரணம் என்ன?

புரட்டாசி மாதத்தில் பூக்களுக்கான தேவை அதிகரித்து விலை உயரும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 24 Sep 2022, 3:45 pm
புரட்டாசி முதல் சனிக் கிழமை வந்தும், தருமபுரி பூக்கள் சந்தையில் பூக்கள் விலை உயராததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
Samayam Tamil flower price


இதில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களுக்கு சரியான விலை இல்லாமல் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி பூக்கள் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் பூக்களை வாங்க ஆளில்லாமல், கேட்பாரற்று விலை குறைந்து விற்பனையானது.

புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால், சனிக்கிழமை விரதம் இருப்பதால், பூக்களின் தேவை அதிகரிக்கும். எனவே பூக்களின் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்று புரட்டாசி முதல் சனிக் கிழமை நாளாக இருந்தும் பூக்களின் விலை உயராமல் கடந்த சில நாட்களாக விலை உயரவில்லை.

இன்றைய பூக்கள் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ.260, கனகாம்பரம் கிலோ ரூ.500, சன்ன மல்லி கிலோ ரூ.280, அரளி கிலோ ரூ.120, பட்டன் ரோஸ் கிலோ ரூ.80, தாமரை ஒரு மொட்டு ரூ.20, சம்பங்கி ரூ.70, செண்டுமல்லி ரூ.30, சாமந்தி பூ ரூ.60 என்ற அளவில் விற்பனையானது. கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையானது.

ஆனால் இன்றும் பூக்களின் விலை உயராததால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அடுத்த வாரம் இரண்டாவது சனி என்பதால் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்