ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வருமா வராதா? உடனே செக் பண்ணுங்க!!

பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் வருமா இல்லையா என்று விவசாயிகள் இவ்வாறு சரிபார்க்கலாம்.

Samayam Tamil 29 Dec 2021, 11:39 am
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10ஆவது தவணைப் பணம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலருக்கு தங்களுக்கு நிதியுதவி கிடைக்குமா அச்சம் இருக்கிறது. பிஎம் கிசான் கணக்கில் பயனாளியின் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் நிதியுதவி வராமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, அடுத்த தவணைப் பணம் கிடைக்குமா என்று செக் பண்ணலாம்.

ஜனவரி முதல் இதெல்லாம் மாறப்போகுது.. சிலிண்டர் விலை முதல் ஏடிஎம் வரை!

நிதியுதவி பெறுவதற்கான தகுதி உள்ளதா, விண்ணப்ப கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா என்று தெரிந்துகொள்ள pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம். அதிலுள்ள 'Beneficiary Status' என்ற ஆப்சனை கிளிக் செய்து உள்ளே சென்றால், ஆதார் நம்பர், மொபைல் நம்பர், அக்கவுண்ட் நம்பர் ஆகிய ஆப்சன்கள் இருக்கும். ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து 'Get Data' என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்களுடைய 10ஆவது தவணைப் பணம் குறித்த அப்டேட்டை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். பிஎம் கிசான் மொபைல் ஆப் மூலமாகவும் நீங்கள் உங்களுடைய ஸ்டேட்டஸ் நிலவரத்தை தெரிந்துகொள்ள முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்