ஆப்நகரம்

விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு.. யூரியா வாங்க மானியம்!

விவசாயிகள் யூரியா வாங்குவதற்கு மத்திய அரசிடமிருந்து 2700 ரூபாய் மானியம் பெறலாம்.

Samayam Tamil 30 Nov 2022, 5:06 pm
காரிப் பருவத்தின் தொடக்கத்திலேயே விவசாயிகளுக்கு யூரியாவின் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் எளிதில் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இப்பிரச்னையை போக்க விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
Samayam Tamil urea


யூரியாவை கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்ததால் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான மானியம் உரிய விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, யூரியா மானியத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் யூரியா மானியம் உரிய விவசாயிகளுக்கு சென்றடைவதுடன், அவர்களுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்க வழிவகை செய்ய முடியும்.

ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு சுமார் 13 முதல் 14 லட்சம் டன் யூரியா தேவைப்படுகிறது. அதில் 1.5 லட்சம் டன் யூரியா மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 2 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்படுகிறது. இன்னும் தேவையைப் பூர்த்தி செய்ய 10 லட்சம் டன் யூரியா தேவை. இதன் மூலம் மீதி யூரியா எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருந்து யூரியாவை இறக்குமதி செய்யாமல் இருக்க, விவசாயிகளுக்குக் கிடைக்கும் யூரியாவை நிறுவனங்கள் வாங்குகின்றன. விவசாயிகளுக்குக் கிடைக்கும் யூரியாவுக்கு அரசு பெரும் மானியம் தருகிறது.

தவறு செய்த நிறுவனங்கள் மீது உரத் துறை அதிகாரிகள் நாடு தழுவிய அளவில் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான மானியங்கள் தவறான நபர்களுக்கு சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல் விதைப்பு அமோகம்.. விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
உண்மையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவும் அதன் விலை அதிகமாக உள்ளது. யூரியாவின் விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் அதை வாங்க முடிவதில்லை. இதற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு மூடைக்கு (45 கிலோ) ரூ.266 மானிய விலையில் யூரியா வழங்குகிறது.

அதே சமயம், இந்த ஒரு மூடைக்கு 2,700 ரூபாய்க்கு மேல் அரசு மானியம் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு விவசாயி யூரியா சொசைட்டியில் சாக்கு வாங்கினால் அவருக்கு உதவியாக 2700 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் பண நெருக்கடி இல்லாமல் விவசாயம் செய்ய முடியும். இதுபோன்ற நிறைய மானிய உதவிகளை மத்திய அரசு விவசாயிகளுக்கு செய்து வருகிறது. பிஎம் கிசான், பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களும் விவசாயிகளுக்கு உதவியாக உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்