ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ரூ.4,000: உடனே இதைப் பண்ணுங்க!

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடித்தால் விவசாயிகளுக்கு 4,000 ரூபாய் கிடைக்கும்.

Samayam Tamil 13 Sep 2021, 7:40 pm
மத்திய அரசின் பிஎம் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் இன்னும் இணையாமல் உள்ளனர். அவர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவுசெய்தால் தகுதியுடைய விவசாயிகளுக்கு மொத்தமாக 4,000 ரூபாய் கிடைக்கும்.
Samayam Tamil pm kisan


இந்த ஆண்டுக்கான முதல் தவணைப் பணம் சுமார் 10.27 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆகஸ்ட் - நவம்பர் காலத்தில் இத்தொகை வழங்கப்படுகிறது. இன்னும் நிதியுதவி வராத விவசாயிகளுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பதிவுசெய்யாத விவசாயிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவுசெய்தால் நவம்பர் மாதத்தில் ஒரு தவணையும், அடுத்த டிசம்பர் மாதத்தில் இன்னொரு தவணையும் நிதியுதவி கிடைக்கும். மொத்தமாக 4,000 ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பிஎம் கிசான்: ரூ.2,000 வரலயா? இந்தத் தவறை உடனே திருத்துங்க!
இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்த விவசாயிகள் சிலருக்கு நிதியுதவி வரவில்லை என்ற புகார் உள்ளது. அவர்களின் வங்கிக் கணக்கு, ஆதார், மொபைல் நம்பர் போன்றவற்றில் பிரச்சினை இருந்தால் நிதியுதவி சரியாக வந்துசேராது. எனவே பிஎம் கிசான் வலைதளத்தில் சென்று பிழைகளைத் திருத்தினால் நிதியுதவி சரியாகக் கிடைக்கும். எனவே pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று அப்டேட் செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்