ஆப்நகரம்

வீடு கட்ட ரூ.50 லட்சம் கிடைக்கும்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்!

விவசாயிகள் வீடு கட்டுவதற்காக ரூ.50 லட்சம் கடன் வழங்கும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Jan 2022, 1:11 pm
புத்தாண்டு அதுவுமாக விவசாயிகளுக்கு செம சூப்பரான திட்டத்தை பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் வீடு கட்ட ரூ.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பெயர் ‘ஸ்டார் கிசான் கர்’. விவசாயிகள் வீடு கட்டவும், ஏற்கெனவே கட்டிய வீட்டைப் புதுப்பிக்கவும் இத்திட்டம் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
Samayam Tamil loan


விவசாயிகள் வாங்கும் கடனைத் திருப்பிச் செலுத்த தேவையான கால அவகாசமும் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த வட்டியில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெறலாம். இதுகுறித்து பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தங்களது வேளாண் நிலத்தில் புதிதாக வீடு கட்ட இத்திட்டத்தின் கீழ் கடன் பெறமுடியும். வட்டி விகிதம் 8.05 சதவீதம் மட்டுமே.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!
ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். கடனைத் திருப்பிச் செலுத்த 15 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். ஏற்கெனவே கட்டிய வீட்டைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கிக் கொள்ளலாம்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு வருமான வரித் தாக்கல் விவரங்களை வழங்கத் தேவையில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்