பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு நிவாரணமும், நிதியுதவியும் வழங்கும் நோக்கில் இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் மாதம் 3000 ரூபாய் பெறமுடியும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், இதற்காக எந்தவொரு ஆவணமும் சமர்ப்பிக்க தேவையில்லை.
மாதம் 3000 ரூபாய் என்றால் ஆண்டுக்கு மொத்தம் 36,000 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். எனினும், பிரதமர் கிசான் மன் தன் யோஜனா (PM Kisan Man Dhan Yojana) திட்டத்தின் கீழ் உள்ள பிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளிகளுக்கு மட்டுமே மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்.
பிரதமர் கிசான் மன் தன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்துகொண்ட விவசாயிகள் பணி ஓய்வு பெற்றபின் மாதம் 3000 ரூபாய் என ஆண்டுக்கு 36,000 ரூபாய் பெற முடியும். விவசாயிகள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
18 வயதை கடந்த விவசாயிகள் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்யலாம். 30 வயதை கடந்த விவசாயிகள் மாதம் 110 ரூபாய் முதலீடு செய்யலாம். 40 வயதை தாண்டியவர்கள் மாதம் 200 ரூபாய் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுக்கு பின் மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்.
மாதம் 3000 ரூபாய் என்றால் ஆண்டுக்கு மொத்தம் 36,000 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். எனினும், பிரதமர் கிசான் மன் தன் யோஜனா (PM Kisan Man Dhan Yojana) திட்டத்தின் கீழ் உள்ள பிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளிகளுக்கு மட்டுமே மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்.
பிரதமர் கிசான் மன் தன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்துகொண்ட விவசாயிகள் பணி ஓய்வு பெற்றபின் மாதம் 3000 ரூபாய் என ஆண்டுக்கு 36,000 ரூபாய் பெற முடியும். விவசாயிகள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
18 வயதை கடந்த விவசாயிகள் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்யலாம். 30 வயதை கடந்த விவசாயிகள் மாதம் 110 ரூபாய் முதலீடு செய்யலாம். 40 வயதை தாண்டியவர்கள் மாதம் 200 ரூபாய் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுக்கு பின் மாதம் 3000 ரூபாய் கிடைக்கும்.