ஆப்நகரம்

தென்னை விவசாயிகள் போராட்டம்.. தமிழக அரசிடம் கோரிக்கை!

தென்னை விவசாயத்தை காக்கவும் கள்ளுக்கான தடையை நீக்கவும் வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 10 Aug 2022, 5:33 pm
விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தமிழக அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடையில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல, கள்ளுக்கான கடையை நீக்க வேண்டும் எனவும், தென்னை விவசாயத்தை காக்க வேண்டும் எனவும் தமிழக அரசிடம் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.
Samayam Tamil coconut


தென்னை விவசாயத்தை காக்க வேண்டும்; கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்; மக்காசோளம், நிலக்கடலை, முட்டைக்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 'நாம்' இயக்கத்தின் சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்காச்சோளம், நிலக்கடலை போன்றவற்றுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், பால் விலையை உயர்த்தி பசும் பால் லிட்டருக்கு 40 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களுக்கு பணத்தை வங்கியில் செலுத்தி பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் இயக்கத்தின் சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பணம் வேணும்னா இதைப் பண்ணுங்க.. விவசாயிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர். விரைவில் தங்களது பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் எனவும் முறையிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்