ஆப்நகரம்

பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி.. ரூ.1.40 கோடிக்கு விற்பனை!

நாமக்கல்லில் நடைபெற்ற ஏலத்தில் 1.40 கோடி ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Jul 2022, 3:23 pm
நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனைக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகளும் விற்பனையாளர்களும் மூட்டை மூட்டையாகப் பருத்திகளைக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். தேவையைப் பொறுத்தி பருத்தி விற்பனையில் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது.
Samayam Tamil cotton farmers


இந்நிலையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள்‌ 4400 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு விற்பனைக்காகக் கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.6889 முதல் ரூ.9505 வரையில் ஏலம் போனது. அதேபோல, சுரபி ரகம் குவிண்டால் ரூ.9260 முதல் ரூ.10105 வரையில் விற்பனையானது.

cotton price: பருத்தி விவசாயிகள் வேதனை.. மிகப் பெரிய நஷ்டம்!
இந்த ஏலத்தில் மொத்தம் 4400 மூட்டைகள் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.6269 முதல் ரூ.9460 வரையிலும், டி.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.9003 முதல் ரூ.9900 வரையிலும், சுரபி ரகம் குவிண்டால் ரூ.9919 முதல் ரூ.9500 வரை ஏலம் போனது. மொத்தம் 4300 மூட்டைகள் விற்பனைக்கு வந்ததில் 1.40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்