ஆப்நகரம்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்... இந்தத் தேதியில் கிடைக்கும்!

பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Oct 2021, 3:49 pm
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்துள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது. இது நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 9 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன.
Samayam Tamil pm kisan


இந்நிலையில் 10ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில் டிசம்பர் மாத மத்தியில் பணம் வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் மாத இறுதியிலேயே நிதியுதவி தொடங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த 10ஆவது நிதியுதவியைப் பெற பதிவு செய்வதற்கு செப்டம்பர் 30தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி விண்ணப்பித்தவர்களுக்கு இந்த 10ஆவது தவணைப் பணம் கிடைக்காது.

தீபாவளிக்கு மூன்று போனஸ்.. அரசு ஊழியர்கள் ஹேப்பி!
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரையில் மொத்தம் 12.14 கோடி விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ளனர். இதற்கு முந்தைய தவணையில் மொத்தம் 10.27 கோடி விவசாயிகள் நிதியுதவி பெற்றனர். இந்த முறை 12.14 கோடிப் பேருக்கு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இன்னும் பல விவசாயிகள் பதிவுசெய்யாமல் உள்ளனர். பதிவுசெய்வதற்கு pmkisan.gov.in என்ற வெப்சைட்டில் சென்று விண்ணப்பிக்கலாம்.

திட்டம் தொடங்கப்பட்டபோது 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பதிவுசெய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதன் பிறகு அந்த விதிமுறை தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறையப் பேர் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்