ஆப்நகரம்

விவசாயிகளுக்கு இனி 4000 ரூபாய்! ஜனவரியில் பணம் வருது?

ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு விவசாயிகளுக்கு 4000 ரூபாய் பணம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Dec 2021, 1:15 pm
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மொத்தம் 3 தவணைகளாக ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படுகிறது.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் விவசாயிகளுக்கு இதுவரையில் 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 10ஆவது தவணைக்காக பதிவுசெய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். டிசம்பர் 15ஆம் தேதி வாக்கில் 10ஆவது தவணைப் பணம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களுக்காக பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் பணம் கிடைத்துவிடும் என்று அரசு தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.

2000 ரூபாய் எப்போது கிடைக்கும்? நீங்களே செக் பண்ணலாம்... ஈசி வழி இதோ!!
இந்நிலையில், விவசாயிகளுக்கு இரட்டை மகிழ்ச்சி தரும் விதமாக அடுத்த தவணையில் 4000 ரூபாய் பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவியையும் இரட்டிப்பாக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விவசாயிகளுக்கு இனி பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டுக்கு 12,000 ரூபாய் நிதியுதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு இறுதி செய்யப்பட்டுவிட்டால், அடுத்த தவணையிலேயே விவசாயிகளுக்கு 4000 ரூபாய் நிதியுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. 10ஆவது தவணைப் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுவிட்ட நிலையில், இரு மடங்கு பணம் கிடைப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்