ஆப்நகரம்

விவசாயிகளுக்கு ரூ.4,000... எப்போது கிடைக்கும் தெரியுமா?

பட்ஜெட்டில் ஏமாந்த விவசாயிகளுக்கு ஆறுதல் எப்போது?

Samayam Tamil 5 Feb 2021, 6:48 pm
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.4,000 பணத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்துக்குள் வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil farmers to get rs 4000 by early april under pm kisan scheme
விவசாயிகளுக்கு ரூ.4,000... எப்போது கிடைக்கும் தெரியுமா?


பிம் கிசான் திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு முன் பணம்!

மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக ஏப்ரல் முதல் வாரத்திற்குள் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.4,000 நிதியுதவியை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,000 டெபாசிட் செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. டெபாசிட் செய்யும் முதல் நாளிலேயே சுமார் 1 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்ததாக, இரண்டாவது தவணை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது.

பணம் எப்படிக் கிடைக்கும்?

மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் சிலரால் இணைய முடியாமல் போனது. நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைய ஆதார் கட்டாயம். குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன் தன் வங்கி கணக்கு விவரங்களும் தேவை.

பட்ஜெட்டில் ஏமாற்றம்!

2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலாவதற்கு முன்பாக, இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான சிறப்பு அறிவிப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, பிஎம் கிசான் திட்டத்துக்கான நிதியுதவி ரூ.10,000 என்ற அளவில் உயர்த்தி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் எந்தவிதமான சிறப்பு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை. விவசாயிகள் போராட்டம் பரபரப்பாக இருக்கும் நிலையில் அவர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெகுவாக இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்