ஆப்நகரம்

வெளிநாட்டில் பணத்தைக் கொட்டும் இந்திய நிறுவனங்கள்!

ஏப்ரல் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 2.51 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளன.

Samayam Tamil 18 May 2021, 5:05 pm
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கி கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருவது போல, இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. தற்போதைய கொரோனா பிரச்சினையையும் தாண்டி பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. கடன் சந்தைகளிலும் முதலீடு செய்கின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 2.51 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளன. இது சென்ற ஆண்டின் ஏப்ரல் மாத முதலீட்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
Samayam Tamil fdi


2020 ஏப்ரல் மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 1.21 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்திருந்தன. சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் கொரோனா பிரச்சினையால் முதன்முதலில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் முதலீட்டில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. 2021 ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில் கடன் சந்தைகளில் 1.75 பில்லியன் டாலரும் மூலதனப் பங்காக 42.14 மில்லியன் டாலரும், உத்தரவாதத் தொகையாக 33.31 மில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

கடன் வாங்கியோருக்கான சலுகை... ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன?

ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டில், அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனம் 1 பில்லியன் டாலரை வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது. சிங்கப்பூரில்தான் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் 14.56 மில்லியன் டாலரை இங்கிலாந்தில் முதலீடு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் இங்கிலாந்தில் 7.85 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்