ஆப்நகரம்

5 நாளில் ரூ.15,000 கோடிக்கு விற்பனை; பண மழையில் நனையும் அமேசான், பிளிப்கார்ட்!

புதுடெல்லி: அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையில் ரூ.15,000 கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளன.

Samayam Tamil 16 Oct 2018, 4:34 pm
ரெட்சீர் கன்சல்டிங் நிறுவனம் ஆன்லைன் வர்த்தக விற்பனை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் 9 - 14 வரையிலான 5 நாட்களில் பண்டிகை கால விற்பனை நடைபெற்றது. அப்போது ரூ.15,000 கோடி அளவிற்கு விற்பனை நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil Amazon


கடந்த ஆண்டு ரூ.10,325 கோடி அளவிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை நடந்தது. இதனை ஒப்பிடுகையில் தற்போது 64% அளவிற்கு அதிக விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மிகப்பெரிய அளவில் பொருட்கள் விற்பனை நடந்தது ஒரு காரணமாகும். இதுகுறித்து பேசிய அமேசான் இந்தியா மூத்த துணை தலைவர் அமித் அகர்வால், ‘கிரேட் இந்தியன் பெஸ்டிவலில்’ முதல் 36 மணி நேரத்திற்குள் கடந்த ஆண்டு விற்பனை முறியடிக்கப்பட்டுள்ளது.

இதில் பேஷன் பொருட்கள் மிக முக்கிய அங்கமாக திகழ்கிறது. 3ல் இரு வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச், இ.எம்.ஐ, வங்கி சலுகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.

அமேசானுக்கு போட்டியாக விளங்கும் பிளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டேஸ்’ மூலம் புதிய விற்பனை சாதனையை படைத்து வருகிறது. 5 நாட்கள் பண்டிகை கால விற்பனையில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் 70% அளவிற்கு பிளிப்கார்ட் ஆக்கிரமித்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 80% அளவிற்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Festive season sales break all records Amazon, Flipkart clock Rs 15,000 crore in just 5 days.

அடுத்த செய்தி

டிரெண்டிங்