ஆப்நகரம்

அதானியில் LIC, SBI பணம்.. மவுனம் கலைத்த நிர்மலா சீதாராமன்

அதானி நிறுவனங்களில் எஸ்பிஐ, எல்ஐசி பணம் இருப்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 Feb 2023, 5:54 pm
அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிவதால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அதானி பங்குகளில் எல்ஐசி (LIC) நிறைய முதலீடு செய்துள்ளதாகவும், எஸ்பிஐ (SBI) வங்கி நிறைய கடன் வழங்கியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Samayam Tamil nirmala sitharaman
nirmala sitharaman


ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் பற்றி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதானி பங்குகள் தவறாக கையாளப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 25ஆம் தேதி முதல் அதானி பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன. அதானி குழுமத்தின் எல்லா பங்குகளுமே சரிந்து வருகின்றன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 75% வரை சரிந்துவிட்டது. இதனால் பங்குதாரர்கள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

அதானி விவகாரம்.. உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பொது நல வழக்கு!
இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு பயங்கரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த கவுதம் அதானி இப்போது 21ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் 59 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதானி பங்குகளில் எல்ஐசி நிறுவனம் நிறைய முதலீடு செய்துள்ளது. இதுமட்டுமல்லாமல், பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அதானி நிறுவனங்களுக்கு நிறைய கடன் வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் பணம் ஆபத்தில் இருப்பதாக எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், இவ்விவகாரம் குறித்து நிதிமைச்சகமோ, நிதியமைச்சர்களோ எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அதானி விவகாரம் குறித்து மவுனம் கலைத்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் News18 ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், எல்ஐசி, எஸ்பிஐ இரண்டு நிறுவனங்களுமே நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு மீறி முதலீடு செய்யவோ, கடன் வழங்கவோ இல்லை. ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு சந்தைகள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதை குறிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்