ஆப்நகரம்

மின்சாரம், அணுசக்தி துறைகளுக்காக அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன?

மின்சாரத் துறை மற்றும் அணுசக்தி துறைக்கான நிவாரண அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Samayam Tamil 16 May 2020, 7:38 pm
பொருளாதார மீட்புக்காகவும், நிவாரணம் வழங்கவும் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதன்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களாக மாலை 4 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் இன்று அவர் பேசுகையில், விமானப் போக்குவரத்து, விண்வெளித் துறை, நிலக்கரித் துறை, கனிமவளங்கள், மின்சாரம், அணுசக்தி ஆகிய துறைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
Samayam Tamil மின்சாரத் துறை நிவாரணம்


மின்சாரத் துறையை பொறுத்தவரையில், மெட்ரோ நகரங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். எனவே மின் விநியோகத்தில் மக்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது என நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.. மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின்சார விநியோகப் பணி கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அணுசக்தி துறையை பொறுத்தமட்டில், மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக பொது - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். வேளாண் சீர்திருத்தங்களுக்காகவும், விவசாயிகளுக்கு உதவவும், உணவுப் பதப்படுத்துதலில் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆய்வு அமைப்புகளுக்கும், தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கும் இடையே இணைப்பை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்