ஆப்நகரம்

இந்தியாவில் பணவீக்கமா? நிர்மலா சீதாராமனின் சர்பிரைஸ் பதில்!

பணவீக்கம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்.

Samayam Tamil 2 Aug 2022, 1:13 pm
இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியபோது தெரிவித்துள்ளார். மேலும், விலைவாசி உயர்வு பற்றி அரசியல் காரணங்களுக்காக மட்டுமே விவாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Nirmala Sitharaman


கடந்த சில மாதங்களாக பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி இரண்டு முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, எதிர்க்கட்சிகளும் பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், பணவீக்கம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் பேசியபோது, “இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பதற்கான ஆபத்துகள் இல்லை. பணவீக்கம் தொடர்பான விவாதம் அரசியல் சார்ந்து இருக்கிறதே தவிர தரவுகள் அடிப்படையில் இல்லை.

இன்சூரன்ஸ் பாலிசி விதிமுறைகள் மாற்றம்.. இதெல்லாம் மாறப்போகுது!
இதுபோன்ற கொள்ளை நோய் பாதிப்பை நாம் கண்டதில்லை. எல்லா தொகுதிகளிலும் மக்களுக்கு உதவி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய நாம் முயற்சித்தோம். எல்லா எம்.பிக்களும், மாநில அரசுகளும் இதில் பங்குபுரிந்துள்ளனர்.

இதுபோன்ற கடினமான சூழலிலும் ஒன்றாக இருந்து நாம் வேகமாக வளரும் பொருளாதாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய மக்களே காரணம். தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் 1.4 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. அரசின் நடவடிக்கைகளால் சமையல் எண்ணெய் விலையும் குறைந்துள்ளது” என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்