கொரோனா வைரஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசுக்கு ஏராளாமான செலவுகளை செய்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பொருளாதார ஊக்கத் தொகைக்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு செலவுகள் அதிகரித்துள்ளதாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்தகவல் தவறானது எனவும், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைக்க திட்டமில்லை எனவும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் அனைத்து துறைகளையும் சார்ந்த ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு முன்மொழிதலும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யான, அடிப்படையற்ற தகவல்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு செலவுகள் அதிகரித்துள்ளதாலும், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்தகவல் தவறானது எனவும், மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைக்க திட்டமில்லை எனவும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் அனைத்து துறைகளையும் சார்ந்த ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு முன்மொழிதலும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. சில ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யான, அடிப்படையற்ற தகவல்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.