ஆப்நகரம்

முறையா வருமான வரி செலுத்தலனா, கூடுதல் வரி உண்டு; அதுக்குனு இவ்வளவா அருண் ஜெட்லி!

வருமான வரி செலுத்தாதவர்களிடம் இருந்து, கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Feb 2018, 12:11 pm
டெல்லி: வருமான வரி செலுத்தாதவர்களிடம் இருந்து, கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil finance ministry collects extra tax from non tax payers
முறையா வருமான வரி செலுத்தலனா, கூடுதல் வரி உண்டு; அதுக்குனு இவ்வளவா அருண் ஜெட்லி!


நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த சில ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாதவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் எந்தெந்த வழிகளில் எல்லாம், அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது, அவர்கள் யார் என கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ரூ.1.7 கோடி வரை கூடுதல் வரி செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த டிசம்பர் வரை ரூ.26,500 கோடி வரை பெறப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கெடுபிடியால், வரி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை 67 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக குறைந்துள்ளது.

தற்போது ரூ.2 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Finance Ministry collects extra tax from non tax payers.

அடுத்த செய்தி

டிரெண்டிங்