ஆப்நகரம்

அகவிலைப்படி உயர்வு... இந்தத் தேதி முதல் கிடைக்கும்!

ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2021, 10:16 am
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்டிருந்தது. நடைமுறையில் உள்ள 28 சதவீத அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் தீபாவளி சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் பயனாளிகளுக்கு இரட்டை மகிழ்ச்சி ஏற்பட்டது.
Samayam Tamil DA hike


இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் 31 சதவீத அகவிலைப்படி கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும் என்று உறுதிசெய்துள்ளது. இந்த உயர்வானது ராணுவத் துறையினருக்கும் பொருந்தும் எனவும், ராணுவத் துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு இதற்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வானது 47.14 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் பென்சனர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காசு மட்டும் இருந்தா போதும்! ரூ.10 லட்சம் சம்பாதிக்கலாம்!
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் மூன்று மாதங்களிலேயே மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.9,488.70 கோடி வரையில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், 2020 ஜனவரி 1, 2021 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 ஆகிய மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்