ஆப்நகரம்

1 லட்சம் கோடியை பறிகொடுத்த டாப் நிறுவனங்கள்!

இந்தியாவின் டாப் 5 நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனத்தை இழந்துள்ளன.

Samayam Tamil 22 Nov 2020, 12:28 pm

கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தையில் அதிக மதிப்புள்ள முதல் 10 நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 1,07,160 கோடி ரூபாய் இழந்துள்ளன. அதிலும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்சமான நஷ்டத்தை சந்தித்துள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


இதுபோக, டிசிஎஸ், இந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற ப்ளூசிப் நிறுவனங்களும் மூலதனத்தை இழந்துள்ளன. எனினும், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 69,378.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த சந்தை மூலதனம் 12,84,246.18 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

சோசியல் மீடியாவிலேயே கோடிகளில் சம்பாதிக்கலாம்!

மேலும், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 4,165.14 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு 9,97,984.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 16,211.94 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு 4,98,011.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 12,948.61 கோடி சரிந்து 4,69,834.44 கோடியாக குறைந்துள்ளது.

மறுபுறம், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 18,827.94 கோடி அதிகரித்து 7,72,853.69 கோடியாக உயர்ந்துள்ளது. மகிந்த்ரா நிறுவனத்தின் மூலதனம் 23,445.93 கோடி அதிகரித்து 3,73,947.2 கோடியாக உயர்ந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் மதிப்பு 3,938.48 கோடி உயர்ந்து 4,19,699.86 கோடியாக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்