ஆப்நகரம்

தலையில் துண்டை போட்ட டாப் நிறுவனங்கள்: 91,699 கோடி இழப்பு!

இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் கடந்த ஒரே வாரத்தில் ஒட்டுமொத்தமாக 91.7 கோடி ரூபாய் மூலதனத்தை இழந்துள்ளன.

Samayam Tamil 29 Nov 2020, 5:52 pm

இந்தியாவிலேயே அதிக மதிப்பு கொண்ட முதல் 10 நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலதனத்தில் ஒட்டுமொத்தமாக கடந்த வாரம் 91,699 கோடி ரூபாயை இழந்துள்ளன. அதிலும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மும்பை பங்குச் சந்தை


ரிலையன்ஸ்ட் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்துள்ளன. மறுபுறம், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இந்துஸ்தான் யூனிலீவர், கொடாக் மகிந்த்ரா பேங்க், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 60,829.21 கோடி ரூபாய் சரிந்து 12,23,416.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம் 13,703.75 கோடி ரூபாய் சரிந்து 4,05,996.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் உயர்வு!

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 11,020.23 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ பேங்க் மூலதனம் 5,090.54 கோடியும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூலதனம் 1,055.27 கோடியும் குறைந்துள்ளன.

மறுபுறம், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 20,482.86 கோடி உயர்ந்துள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மூலதனம் 11,181.01 கோடியும், டிசிஎஸ் நிறுவனத்தின் மூலதனம் 7,335.91 கோடியும், இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் மூலதனம் 4,135.22 கோடியும், கொடாக் மகிந்த்ரா பேங்கின் மூலதனம் 2,538.64 கோடியும் உயர்ந்துள்ளன.

கடந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் 267.47 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதாவது சென்செக்ஸ் 0.60 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்