ஆப்நகரம்

சென்னையை முந்திய கோவை.. எதில் தெரியுமா?

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களை காட்டிலும் கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களின் வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக எஸ்பிஐ ரிப்போர்ட் கூறுகிறது.

Samayam Tamil 8 Aug 2022, 4:58 pm
சென்னை, பெங்களூரு போன்ற இரண்டாம் நிலை நகரங்களை விட கோவை, விசாகப்பட்டினம், கவுகாத்தி, ராய்பூர், சூரத், வதோதரா, ஜெய்ப்பூர், லக்னோ, டேராடூன் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ஃப்ளாட்களின் (Flats) விலை அதிகமாக இருப்பதாக எஸ்பிஐ (SBI) வெளியிட்டுள்ள ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil property


வீடுகளின் விலை நிலவரம் குறித்து எஸ்பிஐ ஆய்வு ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோ நகரங்களை காட்டிலும் கோயம்புத்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை உயர்வாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடங்கியபோது வீட்டில் இருந்தே செய்யக்கூடிய வேலைகளின் (Work from home jobs) எண்ணிக்கையும், ஃப்ரீலான்ஸ் வேலைகளின் (Freelance jobs) எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. தற்போதும் இந்த வேலைகளை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கு விருது.. ஏற்றுமதியாளர்களுக்கும் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
இதன் விளைவாக இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வீடுகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ ஆய்வு ரிப்போர்ட் கூறுகிறது.

இதுபோக, அண்மையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் தங்கள் அலுவலகங்களை தொடங்கி வருகின்றன. திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் ஐடி நிறுவனங்கள் அலுவலகங்களை தொடங்கி வருகின்றன. இதனால் இந்நகரங்களில் வீடுகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்